ஆரியரும், தமிழ்த் தொண்டும்


ஆரியப் பார்ப்பனர்கள் என்பதால், பரிதிமாற்கலைஞர், இராமச்சந்திர தீட்சதர், கே.வி. சுப்பிரமணிய அய்யர், .வே.சா., பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்ற இவர்களைப் புறக்கணிக்க முடியுமா? இவர்கள் தமிழ்த் தேசிய ஒற்றுமைக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்கள். எனவே, பெரியாரின் ஆரிய எதிர்ப்பு தவறானது என்கிறார் குணா.
விதிவிலக்குகளைப் பொதுக் கருத்தாக்கி வாதிடுவதோ, முடிவிற்கு வருவதோ கூடாது என்று அடிப்படை அறிவுகூட இன்றி பெரியாரின் ஆரிய எதிர்ப்பு தவறு என்பது பெரும் பிழை ஆகும்.
பரிதிமாற் கலைஞர் என்கிற சூரிய நாராயண சாஸ்திரியார் தான் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆனால் 99.9 சதவீதம் ஆரியப் பார்ப்பனர்கள் அதை ஏற்கவில்லையே இன்றளவும் ஏற்கவில்லையே. செம்மொழி என்ற வார்த்தை எங்கிருந்தாலும் அதைச் செதுக்கி எடுக்கிறார்கள்; மறைத்துப் பதுக்குகிறார்கள். இதுதானே  நடைமுறை.  ஒரு சூரிய நாராயண சாஸ்திரியாருக்காக ஆரியப் பார்ப்பனர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ள முடியுமா?
.வே.சா. தமிழ்ப் பணியாற்றினார் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு அவர் ஆரியப் பற்று அதிகம் பெற்று விளங்கினார் என்பதும் உண்மை. அவர் ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கம் கொண்ட தமிழ் தேசியத்திற்கே துணை நின்றார். அது மாபெரும் கேடு அல்லவா?
தமிழர் மரபு என்னும் தலைப்பில் 1941ஆம் ஆண்டு வானொலியில் பேசிய .வே.சா. ஓர் ஏழை வேலைக்காரனைப் பார்த்துச் சோறு தின்றாயா? என்று கேட்கலாம். ஆனால் ஒரு கனவானைப் பார்த்து அவ்வாறு கேட்டுவிடக்கூடாது. போஜனம் ஆயிற்றா? என்றே வினவிடல் வேண்டும். அதுதான் தமிழ் மரபு என்றும், அந்தணர்களைப் பார்க்கும்போது, நிவேதினம் ஆயிற்றா? என்றும், துறவிகளிடம், பிக்ஷ்சை ஆயிற்றா? என்றும் வினவ வேண்டும் என்கிறார்.
(ஆதாரம் : .வே.சா. தமிழர் மரபு, செந்தமிழ்ச்செல்வி, 1941, சிலம்பு. . பரல் .)
இதுதான் தமிழ்ப் பற்றா? தமிழை உயர்த்துவது இதுதானா?
தமிழ் என்பது வேலைக்காரனிடம் பேசப்பட வேண்டும். உயர்நிலையில் உள்ளவர்களிடமும், ஆரியப்  பார்ப்பனர்களிடமும் சமஸ்கிருதத்தில் பேச வேண்டும் என்கிறார்.
அவர்தான் பேசினார் என்றால் அதை அப்படியே தணிக்கை செய்யாது வானொலி ஒலி பரப்பியது. காரணம் இவரும் அவாள், அவர்களும் அவாள்கள். இதைத் தவிர வேறு என்ன?
.வே. சாமிநாத அய்யரின் இந்த உரையைக் கண்டித்து, கி..பெ. விஸ்வநாதம் அவர்கள் எது தமிழ் மரபு? என்னும் தலைப்பில் செந்தமிழ்ச் செல்வியிலே கட்டுரை எழுதினார்.
முதலில், தமிழர் என்பதன் அடையாளத்தைச் சரியாக வரையறுத்துக் கொண்டு தமிழ்த் தேசியம் பேச வேண்டும்.
சம உரிமை, தன்மானம், ஜாதி, மத பேதமற்ற மனிதநேயம், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கை சம வாய்ப்பு, மாற்றார் உணர்வுகளை மதித்தல், வீரம், காதல், விருந்தோம்பல் என்ற இயல்புகளை உள்ளடக்கியதே தமிழ்த் தேசியம். இவையில்லாது வெறும் எல்லையும், மொழியும் தமிழ்த் தேசியம் என்று எண்ணிச் செயல்படுகின்றவர்கள் எதையும் சாதிக்காது, எதிரிக்கு இடங்கொடுத்து ஏமாந்து போவதோடு, தமிழர் மேம்பாட்டையும் கெடுத்தொழித்தவர்கள் ஆவர். இதைத் தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும், தமிழ்த் தேசியம் பேசுவோரும் உணர வேண்டும்.
ஆரியப் பார்ப்பனீய எதிர்ப்பு இல்லாத தமிழ்த் தேசியம் என்பது இல்லவே இல்லை என்பதே உண்மை. காரணம், தமிழன் மண்ணைத் தொலைத்தது, கல்வியை இழந்தது, சிந்தனை இழந்தது, மற்றதைத் தொலைத்ததும், மொழியின் தூய்மையை இழந்ததும் ஆரியத்தால்தான். எனவே, எதிலெல்லாம் ஆரிய மேலாண்மையும், ஆரிய கலப்பும் உள்ளதோ அவற்றை அகற்றுவதே தமிழ்த் தேசிய உணர்வுக்கான அடிப்படை பணி. இன்று தமிழ்த் தேசியம் பேசுவோர் எவராயினும் பெரியாரின் இப்பணியால் விழிப்பு பெற்றதன் விளைவால் எழுச்சி பெற்றோரே என்பதை எவரும் மறுக்கவும் இயலாது; மறக்கவும் கூடாது.
பாரதியார் தமிழ்ப்பற்று உடையவர் என்றாலும், அவரிடமும் ஆரியப் பற்று இருந்தது. ஆரிய நாடு என்று இந்தியாவை அழைத்தார். இலங்கையை சிங்களத் தீவு என்றார். தமிழர்க்குரியதை மாற்றினார். தமிழை வாழ்த்தும்போது பாரதியார் தன் ஆரியப் பற்றோடே தமிழைத் தரம் தாழ்த்திப் பாடுகிறார். தமிழ்த்தாயே தன்னைப் பற்றிக் கூறுவதாய், உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் என்று பாடினார். ஒரு செத்த மொழியைப் போல, தமிழ் வாழ்ந்ததாய்ச் சொல்வது தமிழுருக்குக் கேவலமல்லவா?
தமிழ் போல ஆரியம் என்று சொன்னால்கூட மன்னிக்கலாம். ஆனால், உயர் ஆரியம் போல வாழ்ந்தேன் என்று தமிழ் சொல்வதாய் சொல்கிறார். இதுதான் ஆரியப் புத்தி!
அவர் மூடநம்பிக்கைகளை முற்றிலுமாக விலக்கி வெளியில் வந்து விடுதலைக்குச் சரியான வழி காட்டவில்லை.
தனக்குக் காணிநிலம் தேவைக்கு பராசக்தியிடம் கேட்கிறார்
லெனின் பாடுபட்டு, போராடி புரட்சி செய்து படைத்த சமதர்மத்தை மாகாளி மனசு வைத்ததால் ருஷ்ய புரட்சி வெடித்தது என்றார். ஏன் மற்ற இடங்களில் மாகாளி மனசு வைக்கவில்லை என்ற எளிய சிந்தனைகூட அவருக்கு ஏற்பட வில்லை. இப்படிப்பட்ட சிந்தனைகளால் தமிழ்த் தேசிய உணர்வு வருமா? இந்தச் சிந்தனைகள் அந்த உணர்வைத் தூண்டுமா? மாறாகச் சீர்குலைக்கும், நீர்க்கச் செய்யும்.
உண்மை என்னவென்றால் தமிழ் உணர்வோடு, ஜாதியை எதிர்த்துச் செயல்பட்டார்கள் என்பதற்காக பாரதியார், வைத்தியநாத அய்யர் போன்றோரை ஆரியப் பார்ப்பனர்கள்தான் புறக்கணித்தனர்; நாம் புறக்கணிக்கவில்லை.
பாரதியார் இறுதி ஊர்வலத்தில் அய்ந்தாறு பேர்தான் கலந்து கொண்டார்கள் என்றால், எந்த அளவிற்குப் பார்ப்பனர்கள் அவரை வெறுத்துப் புறக்கணித்துள்ளனர் என்று பாருங்கள்! வைத்தியநாத அய்யர் வீட்டில் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு கக்கன் அவர்கள் தங்கிப் படித்தார். வைத்தியநாத அய்யரும் தன் பிள்ளையாகவே ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த கக்கனை நடத்தினார். 23.02.1955 இல் வைத்தியநாத  அய்யர் இறந்தார். அவர் பெற்ற பிள்ளைகள் மொட்டையடித்துக் கொண்டபோது, கக்கனும் மொட்டையடித்துக் கொண்டார்; பிள்ளைகளோடு பிள்ளையாய் தானும் நின்றார்.
இதை ஆரியப் பார்ப்பனர்கள் தீவிரமாய் எதிர்த்தனர். பிராமணன் வீட்டுச் சடங்கை ஆதி திராவிடன் செய்வதா? கொதித்தனர். ஆனாலும், வைத்தியநாத அய்யரின் குடும்பத்தார் கக்கனைச் சேர்த்துக் கொண்டே இறுதிக்கடனைச் செய்தனர். இதனால் ஆரியப் பார்ப்பனர்கள் எதிர்ப்புத் தெரிவித்துக் கலைந்து சென்றனர். விதிவிலக்காக ஒருவர் வந்தாலும் அவர்களை ஆரியப் பார்ப்பனர்கள் எதிரியாகத்தான் பார்த்தனர். எனவே, விதிவிலக்கை வைத்து வாதம் பேசக்கூடாது. ஆரிய இனத்தின் தலைவர்போல் செயல்பட்ட சங்கராச்சாரி என்ன செய்தார் என்று பார்க்க வேண்டும். அவர் செயல்பாடுகள்தான் ஆரிய இனத்தின் அடையாளம்.
தன்னுடைய பூசை வேளையில் தமிழ் என்னும் நீச பாஷையில் பேச மாட்டேன் என்று அடம்பிடித்துத் தமிழைக் கேவலப்படுத்தியவரல்லவா? இன்றளவும் அதுதானே நடைமுறை.
சங்கராச்சாரி வாயில் தமிழ் வழிப்பாட்டு நேரத்தில் வரக் கூடாது; கோயிலில் பூசையின்போது தமிழ் வரக்கூடாது. தமிழன் வீட்டுத் திருமணத்தில் கூட தமிழ் வரக்கூடாது என்றும், அது இழிமொழி, அது தீட்டுடையது என்றும் இன்றளவும் ஆரியப் பார்ப்பனர் கூறுவதெல்லாம் குணாக்களுக்குத் தெரியாதா? ஏதோ உளச்சான்றோடு ஓரிரண்டு பார்ப்பனர்கள் நியாயமாக நடந்தால், தமிழுக்காகத் தொண்டாற்றினால் அதை வைத்துக்கொண்டு ஆரியர்களை எதிர்ப்பது தவறு என்பது, தமிழர்களை ஏமாற்றி, ஆரியத்திற்கு ஆதரவளிக்கும் நிலையல்லவா? அதற்குப் பெயர் அயோக்கியத்தனமல்லவா? குணாக்களைத்தான் கேட்கிறேன்!


நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

ஆங்கிலத்தை ஏற்று தமிழைப் புறக்கணித்தாரா?